குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும்: மயில்சாமி அண்ணாதுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும்: மயில்சாமி அண்ணாதுரை

சென்னை டிச 4- குலசேகரப் பட்டினம் ராக்கெட் ஏவு தளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என மயில்சாமி அண்ணா துரை தெரிவித்தார். 

சென்னை மாநகர காவல்துறை சார்பில், சென்னையை அடுத்த மேற்குத் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி யில் 'சிற்பி மனிதம் பழகு' திட்டத்தில் சென்னை யில் உள்ள 100 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயி ரம் மாணவ-மாணவி களுக்கான தேசப்பற்று ஊக்குவிக்கும் கருத்தரங் கம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசிய தாவது:-

அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு போன்றோர் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களாக இருந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். ஆகவே அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையா ளம் அல்ல, பெருமையின் அடையாளம். உங்களை (மாணவர்கள்) நீங்கள் செதுக்கிக் கொண்டே இருங்கள். வெற்றி பெற் றால் சிலையாகுங்கள். இல்லையேல் சிற்பியாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இந்திய விண் வெளி ஆய்வு மய்யத்தின் (இஸ்ரோ) மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு அரசுப் பள்ளி மாணவ-மாணவி களின் பல்வேறு கேள்வி களுக்கு பதில் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களி டம் மயில்சாமி அண்ணா துரை கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு சிற்பி திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் குல சேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தமிழ்நாட் டைப் பொறுத்த வரைக் கும் மிகச்சிறந்த வாய்ப் பாக உள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் போது இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்துவ தாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். 

இதில் சிறீசாய்ராம் கல்வி குழுமத் தலைமை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, சென்னை மாநகர காவல் துறை தலைமையிட இணை ஆணையர் சாமுண்டீஸ் வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment