லக்னோ, டிச. 25, உத்தரப் பிரதேசத்தில் புதிதாக சேர்ந்த சமையற்காரர் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்த உடன் பள்ளி நிர்வாகத் தினர். உணவை கழிப்பறையில் வீசிவிட்டுச்சென்றுவிட்டனர்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜெவன்பூர் பகுதில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியில் இருந்த நபர் உடல் நலமில்லாமல் இருந்ததால்.. அவருக்கு பதில் சில நாள் உணவு சமைக்க அருகில் உள்ள ஊரிலி ருந்து ஒரு சமையற்காரரை அங்கு அனுப்பி உள்ளனர்.
அவரும் வந்து சமைத்து விட்டு மாண வர்களை சாப்பிட அழைத்துள்ளார். அப் போது பள்ளி நிர்வாகத்தினர் சிலர் பழைய சமையற்காரர் எங்கே என்று கேட்டுள்ளனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை.,அவருக்கு பதில் நான் சமைக்கவந்துள்ளேன் என்று கூறி சமைத்த பொருட் களைக் காட்டி அனைவருக்கும் உணவு கொடுக்கத் தயாரானார்.
அப்போது சிலர் அவரது ஜாதி குறித்து கேட்டுள்ளனர். அவர் குறிப்பிட்ட ஜாதி யைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும் பள்ளி நிர்வா கத்தினர் அவரை கடுமையாக திட்டி உள்ளனர். மேலும் அவரை அடித்து சமையலறையில் இருந்த உணவை அங்கிருந்த கழிப்பறையில் கொட்டினர்.
மேலும் அங்கிருந்த நிர்வாகத் தினர் மாணவர்களிடம் இவர் பங்கி (தாழ்த்தப் பட்ட வகுப்பில் ஒரு பிரிவு) இவர் கையால் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டுச் சென்று விட்டனர்.
இந்த நிகழ்வை அங்கிருந்த சிலர் அலைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த ஜாதிவெறி கொடூரம் குறித்து இதுவரை அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும் சமையற்காரர் புகார் அளிக்காததால் யார் மீதும் இதுவரை வழக்கும் பதியவில்லை என்று அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment