Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சமூக நீதிக்கான போராட்டம்
December 02, 2022 • Viduthalai

தந்தை பெரியார் இடைவிடாது போராடி யிருக்கிறார். களம் பல கண்டிருக்கிறார். ஆனால், அவர் பொது வாழ்வில் நுழைந்தவுடன்  முதன் முதலாகக் கையில் ஏந்தியது சமூக நீதிதான். கி.வீரமணியின் பொது வாழ்வுப் பயணம் நெடியது. பிரச்சாரம், போராட்டம் என்று தொடர்ந்து வினையாற்றிக்கொண்டிருக்கிறார். பல்வேறு செயல்பாடுகள், ஏராளமான சாதனைகளை வீரமணி நிகழ்த்தியிருந்தாலும், சமூக நீதிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பே வரலாற்றில் போற்றத்தக்க பணியாக ஒளிவீசும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் முடிவாகும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கேடு விளைவிக்கின்ற 9000 ரூபாய் வருமான வரம்பாணையினை ஒழித்த பெருமை வீரமணியைச் சாரும். இது தமிழ்நாட்டு அளவில் நடைபெற்ற புரட்சி. மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு நல்கும் மண்டல் குழுப் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்திட வீரமணி ஆற்றிய உழைப்பு 

கொஞ்ச நஞ்சம் அல்ல; 1980 முதல் 1994 வரை 14 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிச் சுழன்றார்; குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்து வலியுறுத்தினார். மக்களிடம் பிரச்சாரம் செய்தார். 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தினார். வெற்றி பெற்றார். இது இந்திய அளவில் நடைபெற்ற மகத்தான புரட்சியாகும். 

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்த போது 31சி சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்து அதனை, மத்திய அரசுக்கு அனுப்பி குடியரசுத் தலைவரின் கையொப்பம் பெற்று, ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்த பெருமை வீரமணிக்கு உண்டு. கல்வி பயிலும் மாணவர்கள் படிக்கின்றபோது பாடப் புத்தகத்தில் வீரமணியின் முகமும், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறும்போது வாங்கும் பணத்தில் வீரமணியின் உருவமும் பதிந்திருப்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வார்கள்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn