சமூகவலைதளங்களில் முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

சமூகவலைதளங்களில் முதலமைச்சருக்கு குவியும் பாராட்டு

சென்னை, டிச 12 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக   சமூக வலைத்தளங்களில் முதலமைச்சருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

 வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல்   மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேத்தில் காற்று பலமாக வீசியது. இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டுகள் இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். 

தமிழ்நாடு அரசு இதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோ சனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து. இந்நிலையில் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்பட வில்லை. அதற்காக பாராட்டுகள்! தமிழ்நாடு அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment