சென்னை, டிச. 12, பொன்னேரியை சேர்ந்த வர் சுந்தர்ராஜ் (வயது 50). ஓட்டுநரான இவர், அதே பகுதியை சேர்ந்த பாக்கிய ராஜ்(46), அவரது மகன் யாமஜி(9) ஆகியோரு டன் ஒரு காரில் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்குச் சென் றுவிட்டு, மீண்டும் சென் னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுந்தர்ராஜ் ஓட்டி னார்.
பெரம்பலூர் மாவட் டம், மங்கள மேட்டை அடுத்துள்ள திருமாந் துறை சுங்கச் சாவடி அருகே வந்த போது, முன்னால் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மணலூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் அருண் (25) ஓட்டி வந்த டிப்பர் லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் சுந்தர்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந் தனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவ விரைவு ஊர்தி மூலம் சிகிச்சைக்காக பெரம்ப லூர் அரசு மருத் துவம னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து மங்கள மேடு காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின் றனர்.
No comments:
Post a Comment