மது ஒழிப்புக்கு செய்த மாபெரும் தியாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 24, 2022

மது ஒழிப்புக்கு செய்த மாபெரும் தியாகம்

பெரியார் காங்கிரசில் இருந்த காலம் மதுவிலக்குப் பிரச்சாரம் மும்முரமாக நடந்தபோது காந்தியார் ஒரு கட்டளையிட்டார்; கள்ளுக்கு உதவும் மரங்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும்” என்று.

வடநாட்டில் பெரும்பாலும் ஈச்ச மரங்களில் கள் இறக்குவார்கள். எனவே, அவற்றை வெட்டி வீழ்த்துவதால் பெரிய நட்டம் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை. இங்கே தென்னை மரங்களில் கள் இறக்கப்படுகிறது. தென்னை மரங்களோ நாட்டு மக்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவை, தென்னை மரங்கள் வெட்டப்பட்டால் நாட்டுக்கே பெரிய நட்டம்.

இதைப்பற்றியெல்லாம் பெரியார் சிந்திக்கவில்லை. கொள்கை வெறியில் மூழ்கிய பெரியார் - வடநாட்டில் ஈச்ச மரங்கள் வெட்டப்பட்ட செய்தியை பத்திரிகையில் படித்தவுடன் - தன்னுடைய தோட்டங்களிலிருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டிச் சாய்த்தார்.

மது ஒழிப்புக் கொள்கைகாக பெரியார் செய்த மாபெரும் தியாகத்தை போற்றாதவர்களே இருக்க முடியாது.

- ‘விடிவெள்ளி’இதழ், 25.12.1973- பக்கம் 3

No comments:

Post a Comment