வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களது சிலை திறப்பு விழா -எனது தலைமையில், டாக்டர் நாவலர் அவர்களால், செல்வி டாக்டர் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் ஆக இருந்தபோது 1994 இல் திறக்கப்பட்டது.
அதன் பிறகு, மேனாள் முதலமைச்சர் என்ற பெருமைபடைத்த வைக்கம் நகரைச் சார்ந்த எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி வி.என்.ஜானகி அம்மையார் தனது நிலம் ஒருபகுதி இதற்கு வழங்கி, நல்ல நினைவகம் உருவாக்கப்பட்டது.
இப்போது பல ஆண்டுகள் ஆனபடியால், படங்கள் பழுப்பேறி உள்ளன. பராமரிப்பும் அதிகம் செய்து, ஆடிட்டோரியத்தில் சில நிகழ்வுகள் நடத்திட, மேலும் வாய்ப்பாக தமிழ்நாடு கூடுதல் நிதி ஒதுக்கி, தனியே இதன் சிறப்பை, இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டுகிறோம். இங்குள்ள வர்கள் கூடுமானவரை நன்கு பராமரித்து வரு கிறார்கள்.
மேலும் சிறப்படைய வேண்டும்.
- கி.வீரமணி
6.12.2022
No comments:
Post a Comment