நரிக்குறவர், குருவிக்காரர்கள் பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

நரிக்குறவர், குருவிக்காரர்கள் பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க முடிவு

புதுடில்லி, டிச. 16- பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக் காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்கும் மசோதா நாடாளு மன்ற மக்களவையில் 15.12.2022 அன்று ஒருமனதாக நிறைவேற் றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந் தார். அதில், நரிக்குறவர், குருவிக் காரர் சமூகத்தினரை தமிழ்நாட் டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலி யுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்தி ருந்தார்.

பிரதமருக்கு அவர் எழுதி யிருந்த கடிதத்தில், ‘நரிக்குறவர் கள் சமூகம், மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்ட சமூ கங்களில் ஒன்று. பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்கள் அனைத்து அரச மைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்களாவர். இந்த சமூகத்தை பழங்குடியினர் பட் டியலில் சேர்ப்பது நீண்டகால மாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நரிக் குறவர், குருவிக்காரர் சமூகத்தி னரை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்நிலையில், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14ஆம் தேதி நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக் காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. அமைச்சரவையில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, செய் தியாளர்களிடம் பேசியிருந்த ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் முண்டா, தமிழ்நாடு, கருநாடகா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டி ருந்த சமுதாயத்தினரை சேர்க்க அனுமதி வழங்கி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இதையடுத்து பழங் குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா சமூகத்தின ருக்கும் கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச் சரவையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் தகுதி வழங்கும் மசோதா வியாழக்கிழமை  (15.12.2022) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலை யில், இம்மசோதா மக்களவை யில் நிறைவேற்றப்பட்டது. 

அடுத்தக் கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநி லங்களவை உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அர சாணை வெளியிடப்பட்டு இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.

அதன்பிறகு, தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப் பட்ட சமூகங்களின் உறுப்பினர் கள், ஒன்றிய அரசின் தற்போ தைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும். மெட் ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடு களில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடமிருந்து சலுகை கடன்கள், தாழ்த்தப் பட்ட பழங்குடியின மாணவர் கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன் பெற முடியும். மேலும், ஒன்றிய அரசு கொள்கையின்படி, அர சுப் பணிகள் மற்றும் கல்வி நிறு வனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment