சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்து சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் - மதுரையில் மாபெரும் திறந்தவெளி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்து சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் - மதுரையில் மாபெரும் திறந்தவெளி மாநாடு

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசான பா.ஜ.க. அரசு (ஏற்கெனவே ஆட்சியில் இருந்தபோது அவர்களும் ஒப்புதல் அளித்த திட்டமே இத்திட்டம்) மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்தவும், அனைத்துப் பணிகளையும் உடனடியாக அதே பாதையில் தொடங்கி, நடத்தவேண்டிய அவசர அவசியமும் குறித்தும்,

திராவிடர் கழகம் சார்பில் 

3.1.2023 அன்று மாலை சென்னையில் 

மாபெரும் கருத்தாய்வு விளக்கப் பொதுக்கூட்டம் 

நடைபெறவிருக்கிறது.

27.1.2023 அன்று மதுரை மாநகரில் திராவிடர் கழகத்தின் தலைமையில், சேதுக் கால்வாய் பணிகள் அதே பாதையில் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில், 

தோழமைக் கட்சிகளின் சார்பில், 

ஒரு மாபெரும் திறந்தவெளி மாநாடு 

ஏற்பாடாகி வருகிறது!

ஆங்காங்கு இதுபோன்று ஓங்கிக் குரல் ஒலிக்க, முற்போக்காளர்களும் ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டும்.

- திராவிடர் கழகம்


No comments:

Post a Comment