டாஸ்மேனிய புலியின் எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால முடிச்சு விலகியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

டாஸ்மேனிய புலியின் எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால முடிச்சு விலகியது

உலகில் கடைசியாக வாழ்ந்ததாக அறியப்பட்ட டாஸ்மேனியன் புலியின் எச்சங்கள், 85 ஆண்டுகளா கக் காணாமல் போனதாகக் கருதப்பட்டது. அதன் எச்சங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் அலமாரியிலேயே வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தைலசைன்  (Thylacine)  என்று டாஸ்மேனிய புலி அறியப்படுகிறது. தற்போது எச்சமாகக் கண்டுபிடிக் கப்பட்ட புலி 1936ஆம் ஆண்டில் ஹோபார்ட் காப்பிடத்தில் உயிரிழந்தது. அதன் உடல் உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன் எலும்புகளும் தோலும் என்ன ஆனது என்ற கேள்வி தொடர்ந்து கமுக்கமாகவே நீடித்து வந்தது.

டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக் கூடம், அந்த எச்சங்களை இழந்தன. அதுமட்டுமின்றி, அவை தூக்கி எறியப்பட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வு மூலம், அவையனைத் தும் அருங்காட்சியகத்திலேயே இருந்ததும் சரியாக ஆவணப்படுத்தப்படாமல் போனதால் இருந்ததே தெரியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

“பல அருங்காட்சியக கண்காணிப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல ஆண்டுகளாக அதன் எச்சங்களைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை. ஏனெனில், 1936ஆம் ஆண்டிலிருந்து தைலசின் தொடர்பான எந்தப் பொருட்களும் ஆவணங்களில் பதிவு செய்யப்படவே இல்லை. அதன் உடல் அப்புறப் படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது” என்று 2000ஆம் ஆண்டில் உயிரினங்களின் அழிவு குறித்து ஒரு நூலை வெளியிட்ட ராபர்ட் பேடில் கூறினார்.

ஆனால், அவரும் அருங்காட்சியகத்தின் கண் காணிப்பாளர்களில் ஒருவரும் வெளியிடப்படாத டாக்சிடெர்மிஸ்டின் (இறந்த உயிரினங்களின் தோலை பதப்படுத்தி, அதில் மற்ற பொருட்களை நிரப்பி உயிரோடு இருப்பதைப் போல் செய் பவர்) அறிக்கையைக் கண்டறிந்தனர். இது அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை மதிப்பாய்வு செய்யத் தூண்டியது.

அருங்காட்சியகத்தின் கல்வித் துறையிலுள்ள அலமாரியில் காணாமல்  போன உயிரிழந்த பெண் டாஸ்மேனிய புலியின் மாதிரியை அவர் கள் கண்டுபிடித்தனர். அதை ஒரு பயணக் கண்காட்சிக்காக ஆஸ்திரேலியா முழுக்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அதுதான் கடைசி டாஸ்மேனிய புலி என்பது ஊழியர்களுக்குத் தெரியவில்லை என்று கண்காணிப்பாளர் கேத்ரின் மெட்லாக் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றில் இது சிறந்த தோல் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவை இன்னும் ஊர்ப்புறப் பகுதிகளில் வாழ்வதாக அவர்கள் நினைத்தார்கள்,” என்று அவர் கூறினார். 

தோலும் எலும்புகளும் இப்போது ஹோபார்ட் டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றித் திரிந்ததாக நம்பப்பட்ட டாஸ்மேனிய புலிகளின் எண்ணிக்கை மனிதர்கள் மற்றும் டிங்கோக்களின் (ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய நாய் இனம்) தாக்கத்தால் அருகியது. இறுதியாக, டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டது. பிறகு அங்கும் வேட்டையாடப்பட்டதால் முற்றிலுமாக அழிந்து போனது.

No comments:

Post a Comment