மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31 வரை சிறப்பு முகாம்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 16, 2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31 வரை சிறப்பு முகாம்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை,டிச.16- சென்னையில் செய்தியா ளர்கள் சந்திப்பில் அமைச் சர் செந்தில் பாலாஜி கூறிய தாவது:-2.66 கோடி நுகர் வோரில், 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். இணைய வழி மூலமாக சுமார் 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண் ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பிரிவு அலு வலகங்களில் தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 52 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின் இணைப்பு எண் ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறு கிறது. சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச., 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. இவ்வாறு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment