தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை, டிச. 9- தமிழ்நாட் டில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முத லீடு கொண்டு வரப்பட்டு, அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட் டமைப்பு (சிஅய்அய்) சார்பிலான 12ஆவது வருடாந்திர நிதிநிலை மாநாடு சென்னையில் 7.12.2022 அன்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு நிதிய மைச்சர் பழனிவேல் தியா கராஜன் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் முடிந்துள் ளன. கரோனா நோய்த் தொற்று, கனமழை உட் பட பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தை சீராக வைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14ஆவது இடத்தில் இருந்த தமிழ் நாட்டை 3ஆவது இடத் துக்கு முன்னேற்றியுள் ளோம். கடந்த 15 மாதங் களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழ்நாட் டுக்கு கொண்டு வந்துள் ளோம். இதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்பட்டுள் ளன.

‘ஃபின்டெக்’ போன்ற வளர்ந்து வரும் நிறுவனங் கள் மூலம் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக குறைந்தி ருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் தற்போது மீண் டும் உயரத் தொடங்கியுள் ளது. அடுத்த 3 ஆண்டு களில் தமிழ்நாட்டின் முதலீட்டை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். 

-இவ்வாறு அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment