சிதம்பரம் மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் 1000 போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, 5.12.2022 திங்கள் கிழமை புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் உதவி தலைமையாசிரியர் தலைமையேற்றார். இப்பள்ளிக்கு அய்ந்து பரிசுகள் கிடைத்தன. அப்பரிசுகளை, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோ.நெடுமாறன், காங்கிரஸ் இயக்கத்தின் சொற்பொழிவாளர் மோகன்தாஸ், புவனகிரி ஒன்றிய தலைவர் இராமதாஸ் ஆகியோர் வழங்கினர். புவனகிரி ஆசிர்வாதம் கலந்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை
சிதம்பரம் மாவட்டம், பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற பெரியார் 1000 போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் கலந்து கொண்டு பரிசளித்தார்.
No comments:
Post a Comment