பிரதமரால் மக்களின் குரலை நசுக்க முடியாது! : ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

பிரதமரால் மக்களின் குரலை நசுக்க முடியாது! : ராகுல்காந்தி

மும்பை , நவ.12- பணவீக்கம், பணமதிப்பிழப்பு, வேலையின்மை  மற்றும் சீனா பற்றி நமது மக்களவையில் பேசினால் ஒலி வாங்கியை அணைக்கின்றனர்' எனக் குற்றம் சாட்டியுள்ள காங் கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரத மரே, மக்களின் குரலை உங்களால் நசுக்க முடியாது, அதன் எதி ரொலி உங்கள் ஆணவத்தை உடைக்கும்' எனத் தெரிவித் துள்ளார்.

காங்கிரஸ் மேனாள் தலைவ ரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் 'பாரத் ஜோடோ' என்னும் ஒற்றுமை நடைப் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கினார். தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களை தொடர்ந்து தற்போது மகாராட்டிராவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தில்  காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்களும் இணைய உள்ளனர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

மக்களவையில் சீனாவை பற்றி பேசினால் மைக்கை அணைத்து விடுகின்றனர். அதேபோல், பண வீக்கம், பணமதிப்பிழப்பு, அக்னி பாத், வேலையின்மை பற்றி பேசி னாலும் மைக்கை அணைக்கின் றனர். இது தான் நமது மக்கள வையின் நிலை. பிரதமரே, கவன மாகக் கேளுங்கள்; மக்களின் குரலை உங்களால் நசுக்க முடி யாது. அதன் எதிரொலி உங்கள் ஆணவத்தை உடைக்கும். இவ் வாறு கூறியுள்ளார்.

ராகுலின் மற்றொரு அறிக் கையில், இந்திய இளைஞர்களுக்கு என்னி டம் ஒரே ஒரு செய்தி மட் டுமே உள்ளது. வாழ்க்கை யில் எதற்கும் அஞ்சாமல், உள்ளத்தில் இருந்து வெறுப்பை அகற்றி, நாட் டுக்காக உழையுங்கள்'.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment