புதுடில்லி,நவ.12- பத்து ஆண்டு களுக்கு ஒருமுறை ஆதார் பயோ மெட்ரிக் தகவல்கள், விவரங் களைப் புதுப்பிப்பது கட்டாயம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
2009இல் தொடங்கப்பட்ட இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஅய்டி ஏஅய்) சார்பில் மக்களுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரு கிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக, பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படு வதுடன், 10 விரல் ரேகைகள், கருவிழிப் படலம் உள்ளிட்ட தகவல்களும் பதிவு செய்யப்படு கின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரை, 5 வயதானதும் விரல் ரேகை, கருவிழி பதிவு செய்யப்படுகிறது. அவர்களுக்கு 15 வயதானதும், பயோ-மெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்படு கின்றன.
மேலும், பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழுடன் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை 16 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், யுஅய்டிஏஅய் சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக் கையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல் களைப் புதுப்பித்துக் கொள் ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. தொடர்ந்து, ஒன்றிய மின்னணு, தகவல் தொழில் நுட்பத் துறை ஆதார் விதி முறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள், விவரங்களைப் புதுப் பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள் ளது. https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் அல்லது அருகில் உள்ள ஆதார் மய்யங் களுக்குச் சென்று, தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment