வ(த)ளர்ச்சி
* இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும்.
- பிரதமர் மோடி
>> எதில் வளர்ச்சி? வறுமையிலா, மதவாதத்திலா?
விக்னேஷ்வரர்?
* தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவிலை உடைத்துத் திருட்டு.
>> அவர்தான் விக்னேஷ்வரர் ஆயிற்றே! விக்னம் ஏற்படாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையா?
ஹி... ஹி.... ஹி...
நன்றாகத் தெரிகிறது
* நாட்டின் ஒற்றுமைக்காக ராகுல் யாத் திரை நடத்தவில்லை. காணாமல் போய் வரும் காங்கிரசை மீட்பதற்காக நடத்துகிறார். ஆனால், அதற்குப் பலன் கிடைக்காது.
- நரேந்திர சிங் தோமர்,
ஒன்றிய வேளாண் அமைச்சர்
>> ஆக, ராகுலின் நடைப்பயணம் பி.ஜே.பி. மத்தியில் வயிற்றைக் கலக்குகிறது என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment