சென்னை - தூத்துக்குடிக்கு ரயில் சேவை தேவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

சென்னை - தூத்துக்குடிக்கு ரயில் சேவை தேவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை மனு

சென்னை நவ 23- ‘தஞ்சை, கும்ப கோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே புதிய எக்ஸ் பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும்’ என தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம், மக்களவை உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்தார். 

சென்னை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை, தி.மு.க. துணை பொதுச்செயலா ளரும், தூத்துக்குடி தொகுதி மக் களவை உறுப்பினர் கனிமொழி 21.11.2022 அன்று சந்தித்தார். அப் போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார். கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

* நெல்லை - பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதே போல மும்பை - மதுரை இடையே இயக்கப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலையும் தூத் துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். 

* சென்னை-தூத்துக்குடி இடையே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டி தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னை - தூத்துக்குடி இடையே முன்பு இயக்கப்பட்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் போல, புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப் பட வேண்டும். 

* நெல்லை - தூத்துக்குடி இடையே இருமார்க்கமாக இயக் கப்படும் பயணிகள் ரயில் சேவைக் கான நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து ஒன்றரை  மணி நேரமாக குறைக்க வேண்டும்.

* திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆழ்வார் திருநகரி நிறுத்தத் தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 

* காயல்பட்டினம், குரும்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை அளவு (21 பெட்டிகள் கொண்ட ரயில்கள் சென்றுவர) உயர்த்தப்பட வேண்டும். 

* நாசரேத் ரயில் நிலைய 2ஆவது நடைமேடையை 18 பெட்டிகள் கொண்ட ரயில் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். 

* தூத்துக்குடியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் களை பிடிப்பதற்கு தனியாக ரயில் கள் இயக்குவதை விடவும், குருவா யூர் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் மற்றும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

கோவைக்கு நேரடி ரயில் 

* கடந்த 2020ஆ-ம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இயக்கப்படும் சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் முன்பு இருந்தது போன்றே கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடம்பூர் ரயில்வே 'கேட்' அமைந்திருக்கும் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக கடம்பூர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் பறக்கும் பாலம் அமைக்கப்பட வேண்டும். 

* தூத்துக்குடி-கோவை இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும். 

* தூத்துக்குடி-மேல்மருதூர் இடையே பயணிகள் ரயில் இயக் கும் வகையில் புதிய ரயில்வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 

* திருச்செந்தூர் - நெல்லை இடையே தினசரி 4 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேம்பாலம், 

சுரங்கப்பாதை 

* ஆழ்வார் திருநகரி ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். 

* கோவில்பட்டியில் லட்சுமி மில் கேட், இளையரசனேந்தல் ரயில்வே சாலை, இனாம் மணி யாச்சி, தட்சிணாமூர்த்தி தெரு ரயில்வே சாலை, ராமசாமிதாஸ் பார்க் ரயில்வே பாதை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். 

* நிகிலேசன் நகர் 4-வது ரயில்வே 'கேட்'டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். 

மேற் கண்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்று உள்ளது.

No comments:

Post a Comment