இந்த வார 'துக்ளக்' (23.11.2022) ஏட்டில் திருவாளர் குருமூர்த்தி அய்யர் கொழுப்பேறி 'குதி, குதி' என்று குதிக்கிறார்.
சமூகநீதி பேசுபவர்கள் எல்லாம் பித்தலாட்டக் கும்பலாம்!
தமிழ்நாட்டில் பிஜேபியைத் தவிர அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும் பெரும்பாலான பார்ப்பனர் அல்லாத மக்களும் சமூகநீதி பேசுபவர்கள்தாம்.
தமிழ்நாடு முதலமைச்சரிலிருந்து அத்தனைப் பேரும் சமூகநீதிக்காக உரத்தக் குரல் கொடுக்கப்பவர்கள் தாம் - போராடக் கூடியவர்கள்தாம்.
தந்தை பெரியார் பிறந்த நாளை "சமூகநீதி" நாளாக அறிவித்து, 'உறுதிமொழி' எடுக்க வைத்தவர் 'திராவிட மாடல்' அரசு நடத்திடும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
எவ்வளவு ஆணவமும், பூணூல்தனமும், கொழுப்பும் மண்டைக்கு மேல் வழிந்தால் இவர்கள் அத்தனைப் பேரையும் பித்தலாட்டக்காரர்கள் என்று எழுத தைரியம் வரும்? அன்று சூத்திரன் என்றார்கள்! "சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!" என்ற முழக்கம் கிளம்பியது- அடங்கினார்கள். இன்றைக்கோ "பித்தலாட்டக் கும்பல்" என்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாக் குரல் கொடுக்கும் சமூகநீதிப் போராளி - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாளவன் "வேலை வெட்டி இல்லாதவராம்!" ஏதோ போதாத காலம் தி.க. வீரமணியோடு போட்டி போட்டுக் கொண்டு திருமாவளவன் ஹிந்து மதத்தை தாக்கி வருகிறாராம்.
இந்த வார 'துக்ளக்'கின் திரும்பிய பக்கமெல்லாம் சமூகநீதியா ளர்களைச் சாடுவதுதான்! பித்தலாட்டக்காரர்கள் - சமூகநீதியா ளர்கள் என்று திருப்பித் திருப்பி எழுதித் திருப்திப்படுகிறார்.
மத்தியில் பார்ப்பனீய ஆட்சி என்று மனப்பால் குடிக்கிறார் போலும்!
இது சுயமரியாதை இயக்கம். சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்!
பார்ப்பனர்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் இல்லை. தறுதலைகள் தலைகால் புரியாமல் தாண்டவராயர்களாக தப்பாட்டம் போடுகிறார்கள்.
"தோட்டத்துப் புடலங்காயா தமிழர்நாடு? உரியோன் கண் விழித்தால் தெரியும் சேதி!" என்றார் புரட்சிக் கவிஞர்.
No comments:
Post a Comment