மாநிலத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது! அமைச்சர் முனைவர் க.பொன்முடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

மாநிலத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது! அமைச்சர் முனைவர் க.பொன்முடி

சென்னை,நவ.11- தமிழ்நாட்டுக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். 

அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக் கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, கோவை மண்டல வளாகம் ஆகியவற் றில் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று (10.11.2022) நடை பெற்றது. அமைச்சர் க.பொன்முடி தலைமை வகித்தார். இதில், 2020_-2021 மற்றும் 2021_-2022ஆம் கல்வியாண்டு களில் தேர்ச்சி பெற்ற 10,164 மாணவர் களுக்கு பட் டங்கள் வழங்கப்பட்டன. 

மாணவர்களுக்கு பட்டங்கள், சான்றிதழ்களை வழங்கி தமிழ்நாடு உயர்கல்வித்துறைஅமைச்சர் முனைவர் க. பொன்முடி பேசியதாவது:

வெளிநாடுகளில் பணிபுரிய ஆங்கி லம் தேவைப்படுகிறது. எனவேதான், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஹிந்தியை படிப் பதால் எந்தப் பலனும் இல்லை. அதே வேளையில், சுய விருப்பத்தில் ஹிந்தி, கன்னடம் என எந்த மொழியையும், யாரும் படிக்கலாம். எனினும், மொழித் திணிப்பை ஏற்க முடியாது. தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை என்றும் விட்டுத்தராது. ஒன்றிய அரசு சமஸ் கிருதம் மற்றும் இந்தியை வளர்க்க இந்த ஆண்டில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், தமிழுக்கு ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங் குவதால், அரசுப் பள்ளிகளில் தற்போது இடம் கிடைப்பதே சவாலாக உள்ளது. வரும் ஆண்டுகளில் உயர்கல்வித் தரத்தில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற நிலையை அடையும். அதற்கு, மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

நிகழ்ச்சியில், ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மேனாள் செயலர் டி.ராமசாமி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதி வாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment