பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடம் அறிமுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப்பாடம் அறிமுகம்!

விழுப்புரம், நவ. 5- நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விழுப்புரத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு சிறப்பித்தார். 

மேலும் ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 1,114 மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

பேசிய அவர், "கல்லூரியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் முன்னேறுவதற்காகத்தான் முதலமைச் சரின் 'நான் முதல்வன்' என்ற திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மீடியம் இல்லை என்கின்றனர்.  2010ஆம் ஆண்டிலேயே அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டுவந்தார். தற்போது சிவில், மெக்கானிக்கல், கணினி பாடப்பிரிவுகள் தமிழ் வழி பொறியியல் படிப்புகள் உள்ளன. பல நாடுகளிலும் சென்று பணிபுரிய ஆங்கிலமும் வேண்டும், தாய்மொழியான தமிழும் வேண்டும். தமிழ் மொழியில் பொறியியல், மருத்துவம் படிப்பது தவறில்லை. அதேநேரத்தில், ஆங்கிலத்தை புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழி உள்பட 2 பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப் படும். தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு, அதுவும் தாய்மொழிக்கு ஆபத்து என்றால் முதலில் குரல் கொடுப்பது திரா விட கட்சிகள் தான். திராவிட கட்சிகள் இல்லையென்றால் என் றைக்கோ தமிழ்மொழியை அழித்திருப்பார்கள், மறைத்திருருப்பார்கள்.

தமிழ்நாட்டில்என்றும் இருமொழிக் கொள்கைதான். பன்னாட்டு மொழியான ஆங்கிலத்துடன் தாய்மொழியான தமிழ் மொழியை படிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தியை படிக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தி படிக்குமாறு கூறக்கூடாது.

ஹிந்தியை புகுத்தி அதில் பாடத்தை படிக்க வேண்டும் என்றால், இங்கு பலருக்கும் ஹிந்தி புரியாது. இதற்காக ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்து கற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல; ஹிந்தியை கற்றுக்கொள்ள விருப்பப்படுவோர் என்றார். ஹிந்தியை கற்கலாம், கட்டாய பாடமாக ஹிந்தியை படிக்க வேண்டும் என்றால் ஏற்க மாட்டோம் என்றார். 

No comments:

Post a Comment