பேராசிரியர் மானமிகு க.நெடுஞ்செழியன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

பேராசிரியர் மானமிகு க.நெடுஞ்செழியன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

திராவிட இயக்கச் சிந் தனையாளரும், செயல்பாட் டாளரும், திராவிட இயக்கச் சிந்தனையில் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியவரும், அண்மையில் தமிழ்நாடு அரசின் சார்பில் "செம்மொழி விருது"  பெற்றவருமான பேராசிரியர் முனைவர் மானமிகு க.நெடுஞ்செழியன் (வயது 79) அவர்கள் இன்று (4.11.2022) அதிகாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றோம். நேற்றைக்கு முந்தைய நாள்தான் (2.11.2022) மருத்துவ மனைக்குச் சென்று அவரின் உடல்நலம் விசாரித்து வந்தோம்.

அவரது மறைவு  அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல; தமிழுக்கும், தமிழர்களுக்கும், திராவிட இயக்கத்திற்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.

அவர்தம் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் வாழ்விணையர் - அருமை சகோதரி மானமிகு சக்குபாய், அவரின் மகள் உள்ளிட்டோருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.11.2022

குறிப்பு: திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து நாளை (5.11.2022) இறுதி ஊர்வலம் புறப்படும்.


No comments:

Post a Comment