அதிர்ச்சியில் மோடி? உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

அதிர்ச்சியில் மோடி? உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி

டில்லி, நவ. 17- உச்சநீதிமன்ற வழக் குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், மாவட்ட நீதிபதிகள் உடனான அணுகு முறையில் காலனியாதிக்க மனப்பான்மையை யும் அதிகார கலாச்சாரத்தையும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் கைவிட வேண் டும் என்று  அறிவுறுத்தி யுள்ளார்.

இந்திய அளவில் இது மக்களி டையே மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் காலனியாதிக்க மனோபாவம் இன்றைய ஆட்சியாளர்கள் மத்தி யில் இருப் பதை போல இந்திய நீதித்துறையிலும் இருப்ப தையே அவரது பேச்சு உணர்த்துகிறது. அதிலிருந்து நீதிபதிகள் விடுதலை பெற வேண்டும்; மாறிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருப்பது வரவேற்க்கத்தக்கதே.

நீதித்துறையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதி யமைப்பின் மய்யமாக மாவட்ட நீதிமன்றங்கள் கருதப்படாத வரை யில் எவ்வித மாற்றமும் நிகழப் போவதில்லை என்று மிகச் சரி யாகவே குறிப்பிட்டுள்ளார். ஏனெ னில் ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் மீது விசுவாசமாக இருப்பதை விட அவர்களின் வழிகாட்டு நெறி யான மனு தர்மம், சனாதன தர் மத்தின் மீது பற்றுக்  கொண்டிருப்ப தையே அவர்களது ஆட்சியின் நட வடிக்கைகள் உணர்த்துகின்றன.

மாவட்ட நீதிபதிகளை கீழமை நீதிபதிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் நமக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் அல்ல. அவ்வாறு அழைக்கப்படுவதை தவிர்க்க நான் முயற்சி களை மேற்கொள்வேன் என்று தலைமை நீதிபதி கூறியிருப் பது பாராட்டத்தக்கது. அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். 

மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெருமளவிலான முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி யிருக்கிறார். அதை ஆட்சியாளர்கள் நிறை வேற்றி னால்தான் வழக்குகள் தேக்கம் அடைவது குறையும். ஏனெனில் இப்போது மாவட்ட நீதிமன்றங் களில் 25 சதவீதமும், உயர்நீதி மன் றங்களில் 30 சதவீதமும், உச்சநீதி மன்றத்தில் சில இடங்களும் காலி யாகவுள்ளன என்று அவர் கூறியிருப்பது ஆட்சியாளர்களால் கவனிக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத்திலேயே 71 ஆயிரம் வழக்கு கள் தேங்கியிருக் கின்றன என்பது கவலை யளிக்கும் விசயமாகும். வழக்குகளை பட்டிய லிடுவதற்கு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த விரும்புகி றேன் என்று கூறி யிருக்கும் அவர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத் திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவை ரத்து செய்தது தொடர்பான வழக்கு 2 ஆண்டுக்கு மேலாக விசாரிக்கப்படாமல் இருப்பதை மாற்றிட வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை காப் பாற்றப்படும். நீதிபதியின் இந்த பேச்சு அரசியல்வாதிகளிடையே குறிப்பாக மோடி அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள் ளது என்கின்றனர் டில்லி தலை வர்கள். மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பது வரவேற்கதக்கதே வர வேற்போம் என்றார்.

No comments:

Post a Comment