செஞ்சி,நவ.19- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத் தலைவர் மேல் ஒலக்கூர் பெரியார் பெருந்தொண்டர்
செ.கணபதி ஆசிரியர் (ஓய்வு) கடந்த 11.11.2022 அன்று மறைவுற்றார். தகவல் அறிந்து பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் மறைந்த செ.கணபதியின் மகன் அறி வுடைநம்பியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும், ஆறுதலையும் கூறினார்.
இதனை தொடர்ந்து 12.11.2022 அன்று மாலை நடைபெற்ற இறுதி நிகழ்வில் கழகத் தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று இரங்கலுரை ஆற்றினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தலைவர் ப. சுப்ப ராயன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க. பரணிதரன், அமைப்பாளர் சே.வ. கோபண்ணா, மாவட்ட துணைத்தலைவர் க.திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை. திரு நாவுக்கரசு, பழங்குடி அமைப்பின் நிறுவனர் தலைவர் சுடரொளி என்.சுந்தரம், செ.கணபதியின் இளைய மகன் அறிவுடைநம்பி, அம்மாகுளம் செல்லபாண்டியன் ப.க., மூத்த வழக்குரைஞர் இரா.செல்வராசு, வழக்கு ரைஞர் அணி அமைப்பாளர் ந.விவேகானந் தன், பேராசிரியர் தீரன் மற்றும் செ.கணபதி குடும்பத்தினர் இரங்கல் உரையாற்றினர்.
விழுப்புரம் மண்டல இளைஞரணிச் செயலாளர் த. பகவான்தாஸ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.சதீஷ், செங்குட்டுவன், சாக்ரட்டீஸ் நந்தகுமார். அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
செ.கணபதியின் மரணசாசனப்படி எவ்வித மதச் சடங்கும் இல்லாமல் அவர்தம் உடலில் கழகக் கொடி போர்த்தப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
No comments:
Post a Comment