பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்து விட்டீர்களா?

திருச்சி, நவ.28 மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம், அய்.அய்.அய்.டி, என்.அய்.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மிகாமல் உள்ள மாணவ, மாணவி ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவ தற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23-ஆம் கல்வி யாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள இயக்கத் தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholorship  என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் மேற்படி 2022-2023-ஆம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத் தினை பரிந்துரை செய்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5. தொலைபேசி எண்.044-29515942. மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholorship@gmail.com.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment