சண்டிகர், நவ. 20 பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல் படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் வெள்ளியன்று அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட் டம் கொண்டுவரப்பட்டு உள்ளது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment