குருநானக் பிறந்த நாள் விடுமுறை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு திடீர் மூடலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

குருநானக் பிறந்த நாள் விடுமுறை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு திடீர் மூடலாம்

ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு விடுமுறை விடப் பட்டதை அறிவிக்கும் ஊழியர்.

புதுச்சேரி,நவ.9- குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு, எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஏராளமான நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

புதுச்சேரியில்  உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு, புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழ்நாட்டுப் பகுதிகளிலிருந்து ஏராளமா னோர் சிகிச்சைக்காக வரு வார்கள். இந்த நிலையில் குரு நானக் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (8.11.2022) புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. 

அதன்படி ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. இதை முறைப்படி ஜிப்மர் நிர்வாகம் அறிவிக்க வில்லை.

இதனால் தமிழ்நாட்டின் பகுதிகளான விழுப்புரம், கட லூர், தஞ்சை என பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தனர். ஆனால் யாரையும் உள்ளே அனுமதிக்கா மல் வாயில் கதவு மூடப்பட்டது. நெடுந்தொலைவில் இருந்து சிகிச்சைக்காக வந்த யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டதால், நீண்ட நேரம் வாயிலில் நின்றிருந் தனர். 

தொடர் சிகிச்சையில் இருக் கும் பலரும், ஜிப்மர் மருத்துவ மனையின் இம்முடிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளார்கள்.


No comments:

Post a Comment