தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

தமிழ்நாட்டில் கரோனா குறைந்தது

சென்னை,நவ.21- தமிழ்நாட்டில் நேற்று (20.11.2022) ஆண்கள் 22, பெண்கள் 22 என மொத்தம் 44 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 93,862 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 55,332 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் 78 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 481 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றுமுன்தினம் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரி ழப்பு ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 47 ஆகவும், சென்னையில் 7 ஆகவும் இருந்தது.

இந்தியாவில்...

 நேற்று (20.11.2022) காலை நேர நிலவரப்படி நாடுமுழுவதும் புதிதாக 492 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.6,489 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேநேரம் இந்தியா முழுவதும் 4 உயிரிழப்புகள் கரோனா பாதிப்பால் நிகழ்ந் துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 219.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment