பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

 

நீதிக் கட்சி தொடங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாளில் (நவ. 26) பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதியேற்போம் என்று தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அவர் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்!

ஜாதியின் பெயரால் கல்வி - வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்!

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது!

திராவிடா.. விழி! எழு! நட!

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment