அ.தி.மு.க. ஆட்சி கோட்டை விட்டதால் மழைநீர் தேக்கம் அமைச்சர் கே.என். நேரு பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

அ.தி.மு.க. ஆட்சி கோட்டை விட்டதால் மழைநீர் தேக்கம் அமைச்சர் கே.என். நேரு பேட்டி

சென்னை, நவ. 5 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தனது பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

சென்னை புளியந்தோப்புப் பகு தியை சேர்ந்த சாந்தி, கனமழை காரண மாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார். அவரது குடும்பத் தினரிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத் துக்கான காசோலையை நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று (4.11.2022) வழங்கினர்.

 இதேபோல, மின் விபத்தில் பலியான பெரம்பூரில் உள்ள பி.பி.காலனியை சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக் கும் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் கொடுத்தனர். அப் போது, பெருநகர சென்னை மாநக ராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகி யோர் உடன் இருந்தனர். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில், அம்பேத்கர் நகர் முத்து மாரியம்மன் கோவிலில் இலவச மருத்துவ முகாமை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்

இதையடுத்து கே.என்.நேரு, செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  பல இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டு விட்டது.  மேலும் மழை பெய்தபோது, ஏற்கெனவே தண்ணீர் நின்ற இடங்களிலும், புதிதாக கால்வாய் கட்டாத இடங்களிலும் தேங்கியிருந்த வெள்ளநீரை மோட்டார் வைத்து முழுமையாக அகற்றும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது. வெள்ளநீர் வெளி யேற்றப்பட்ட பின்னர், அங்கு படிந் திருக்கும் சேறு, சகதி அகற்றப்படுகிறது. இதற்கான பணியை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் 4 இடங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  தேங்கிய வெள்ளநீரை அகற்றும் பணி முடிந்துவிட்டது. மழைக்காலம் முடிந்த பிறகு சென்னையில் இருக்கும் சாலை களை முழுவதுமாக புதுப்பிப்பதற்கு முதலமைச்சர் நிதியை ஒதுக்கி தந்தி ருக்கிறார். அதன்படி, மழை முடிந்த பின்னர் சாலைகள் செப்பனிடப்படும் என்றார் அவர். 

No comments:

Post a Comment