ஆளுநரின் அலட்சியம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

ஆளுநரின் அலட்சியம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது

சென்னை, நவ. 28- ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆனது. இதைத்தொடர்ந்து நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஆளு நர் விரைவில் ஒப்புதல் வழங்கு வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளை யாட்டுகளுக்கு பலரும் அடிமை யாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர நிகழ்வுகள், பதைபதைக்க வைத்து விட்டன. இது மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் பேசும் பொரு ளானது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது. இதை யடுத்து ஆன்லைன் சூதாட்டங் களைத் தடை செய்து தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் இயற்றி, கடந்த மாதம் 1-ஆம் தேதி ஆளு நர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம் மதிப்பெருமூச்சு விட வைத்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, அந்த அவசரச் சட்டத் துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, 'தமிழ்நாடு ஆன் லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'- சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

ஆளுநருக்கு விளக்க கடிதம்

அவசரச் சட்டத்தைப் போன்று இந்த சட்ட மசோதா வுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான நிரந்தர தடைச்சட்ட மசோதா வுக்கு நீண்ட நாள்களாக ஆளு நரின் ஒப் புதல் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக் கங்கள் கேட்டு தமிழ்நாடு அர சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24-ஆம் தேதி காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலை யில், அடுத்த 24 மணி நேரத்திற் குள் தமிழ்நாடு அரசு விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த 25-ஆம் தேதி செய்தியாளர்களி டம் பேசும்போது, "ஆளுநரின் கடிதத்தில் மசோதாவில் ஏற் பட்டுள்ள சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட் டது. விளக்கம் கேட்ட 24 மணி நேரத்திற்குள் சட்டத்துறை அதற்கான உரிய பதிலை தயாரித்து 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் அலுவல கத்திற்கு அனுப்பி வைத்தது.

அரசியல் சாசன சட்டம்

விளக்கத்தை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று காத்திருந்தோம். அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், நிரந்தர சட்ட மசோ தாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்க தயக்கம் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்க ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால் நேரம் ஒதுக்கித்தரப்பட வில்லை" என தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசால் ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1ஆம்தேதி கொண்டு வரப்பட் டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். இதுபற்றிய விதி, அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யில் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு சட்டசபை கடந்த மாதம் 17ஆம் தேதி கூடியது. நேற்றுடன் (27.11.2022) 6 வாரங் கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் காலாவதியாகி உள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய புதிய மசோதாவான 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட் டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-க்கு ஆளுநர் கேட்ட விளக்கத்தை தமிழ்நாடு அரசு அளித்தும், இன்னும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. அதே நேரத் தில் அவசரச் சட்டம் காலாவதி யாகி உள்ள நிலையில், ஆன் லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment