பெங்களூரு, நவ. 28- அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கருநாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கருநாடக மாநிலம் பெல காவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மய்யத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கருநாடகா - மகா ராட்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன் தினம் (26.11.2022) சுற்றுலா சென்றிருந்தனர்.
பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, கோல்காபூர் மாவட்டம் சந்கட் தாலுகாவில் உள்ளது. மாணவிகள் சிலரின் பெற்றோ ரும் உடன் சென்றிருந்தனர். அருவி நீரில் மாணவிகள் அனை வரும் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் 5 மாணவிகள் சற்று முன்னேறி, தண்ணீர் விழும் இடத்துக்கு அருகில் சென்று, செல்ஃபி எடுத் துக் கொண்டிருந்தனர். அப் போது, அவர்கள் கால் இடறி, 15 அடி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் விழுந்தனர். இவர் களது அலறல் சப்தம் கேட்டு, உள்ளூர் இளைஞர்கள் சிலர் தண்ணீரில் குதித்து, மாணவி களை மீட்க முயன்றனர். அதற் குள் 4 மாணவிகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர். ஒருவர் தத்த ளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் 5 மாணவிகளும் மீட்கப்பட்டு, பெலகாவி மருத்துவ அறிவியல் மய்யத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.
சுயநினைவின்றி இருந்த ஒரு மாணவி, தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர் கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment