உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை வரவேற்கும் கேரள கிறிஸ்டியன் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை வரவேற்கும் கேரள கிறிஸ்டியன் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகள்

கொச்சி, நவ. 20- உலக கால் பந்தாட்ட அணிகள் ஆவ லோடு காத்திருக்கும் பிபா உலகக் கோப்பை விளையாட்டுக்கள் இன்று (20.11.2022) கோலாகல மாக கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் துவங்க உள்ளது. இந்த விளையாட்டின் நினை வாக இந்திய கால்பந் தாட்ட வீரர்களை சிறப் பிக்கும் வகையில் மலபார் கிறிஸ்டியன் கல்லூரி வர லாற்றுத்துறை பேராசிரி யர் வசிஷ்ட் மற்றும் அத்துறை மாணவிகள் பதாகை ஒன்றை உரு வாக்கி உள்ளனர்.

 பி.கே.பானர்ஜீ, சவுனி கோஸ்வாமி, ஜர்னேல் சிங், பீட்டர் தங்கராஜ், சைலேந்திரநாத் மன்னா, மற்றும் நவல்லே டிசவுசா போன்றவர்களின் படங் களை அந்த பதாகையில் பதித்து உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டுத் திருவிழாவை வரவேற்று உள்ளனர்.


No comments:

Post a Comment