ஒன்றிய அமைச்சருக்கு பிடியாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

ஒன்றிய அமைச்சருக்கு பிடியாணை

புதுடில்லி, நவ 20 மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜான் பர்லாவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசில், சிறுபான்மையினர் நலன் துறை இணை அமைச்சர் பதவி வகிப்பவர், ஜான் பர்லா (வயது 47). மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இவர் தேயிலைத்தோட்ட தொழி லாளியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். 

கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இவர் அலிப்பூர்துவார்ஸ் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.   கடந்த தேர்தலின்போது, காவல்துறை அனுமதி பெறாமல் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்து, பக்‌ஷர்ஹாட் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கு கூச்பெஹார் மாவட்டத்தின் துபான்கஞ்ச் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.  ஆனால் அவர் அதன்படி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய் யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  


No comments:

Post a Comment