இந்து-முஸ்லிம் ஒற்றுமை நெகிழ்ச்சி - கோவை ஈஸ்வரன் கோயிலில் முஸ்லிம்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

இந்து-முஸ்லிம் ஒற்றுமை நெகிழ்ச்சி - கோவை ஈஸ்வரன் கோயிலில் முஸ்லிம்கள்

கோவை, நவ. 5- கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். பின்னர் செய் தியாளர்களிடம் பேசிய அவர்கள், "அனைத்துத் தரப்பு மக்களுடனும் ஒரு நல் லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதி யில் நிகழ்வு நடந்த இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியா ளர்களை சந்தித்தனர். அப் போது அவர்கள் கூறியது: "3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த நிகழ்வு பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உரு வாகியுள்ளது.

இசுலாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமை யுடன், அண்ணன் தம்பிக ளாக கடந்த 200 ஆண்டு களாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடை பெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார் பில் வன்மையாக கண்டிக்கி றோம்.

இசுலாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுட னும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும் புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக் கும் நாங்கள் ஆட்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment