Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
November 14, 2022 • Viduthalai

 நம் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்?

இன்று (14.11.2022) குழந்தைகள் நாள் - இந்தியாவின் விஞ்ஞான   வளர்ச்சிக்கு வித்திட்ட நவீன இந்தியாவின் சிற்பியாகவும், ஜனநாயகம், மதச் சார்பின்மை போன்ற அரிய தத்துவங்களுக்குத் தக்க பாதுகாவலராகவும் தனது ஆட்சியை நடத்திய ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகளை மிகவும் நேசித்தவர் என்பதால் அவரது பிறந்த நாளான இன்றைய நாளை (நவம்பர் 14) 'குழந்தைகள் நாளாக' அறிவித்து, நாடு கொண்டாடி வருகிறது!

குழந்தைகளை நேசிக்காதவர்கள் யார்? மிருகங்களில்கூட, தனது குட்டிகளை பெற்றதோடு, வளர்த்து - தனித்தன்மையுடன் அவை வளரும் வரை - அவற்றைப் பழக்கி விடுவதும் தாய் பிராணிகளுக்குப் பொறுப்பாக இருப்பதை நாம் பார்த்து மகிழக் கூடிய ஒன்றுதானே!

பன்றிகள்கூட தாம் பெற்றெடுத்த பல குட்டிகளின் அருகில் மனிதன் நெருங்கினால் சீறிப் பாய்ந்து மனிதர்களைக் கடிக்கக்கூட ஆயத்தமாகி விடுகின்றனவே!

அப்படியானால் ஆறறிவு படைத்த மனிதர்கள் குழந்தைகளை எப்படிப் போற்றி, தாய்ப்பாலை ஊட்டும் போதே, பகுத்தறிவுப் பாலையும், ஊட்டி விட வேண்டாமா?

பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஜாதி, மதம் எதுவும் இல்லாதவையாகத் தான் இந்த உலகத்திற்கு வருகிறது!

ஆனால் மூடநம்பிக்கையுடன் உள்ள சில பெற்றோர்களே அதற்கு பலவித கற்பனைகளை கடவுள் - மதம் - பூதம் - பேய் - பிசாசு, 'அஞ்சுகண்ணன்", "பூச்சாண்டி" என்று சொல்லி பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைப் பாய்ச்சி விடுகிறார்கள். கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதுபோல,

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொண்ணு ஆடுதுன்னு

விளையாடப் போகும் போது

சொல்லி வைப்பாங்க - உன்

வீரத்தைக் கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட

நம்பி விடாதே - நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே - நீ

வெம்பி விடாதே

என்று பாடியது எம்.ஜி.ஆர். பாட்டு மூலம் ஒலித்துக் கொண்டே உள்ளது.

என்றாலும் பெற்றோர்களாகிய இந்த "பெரிய குழந்தைகள்" திருந்துவதாகவே இல்லை - என்ன செய்வது? இது ஞான பூமியல்லவா? அதனால் வருடா வருடம் பூமியைப் பாயாகச் சுருட்டி, கடலுக்குள் சென்று ஒளித்து வைத்த அசுரன் கதையையொட்டிய 'தீபாவளி' பண்டிகையைப் புகுத்தி, புத்தாடை, பட்டாசு, பலகாரம் என்பவற்றைக் காட்டி குழந்தைகளைத் திசை திருப்புவது தில்லுமுல்லு நாடகமா - அல்லவா?

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பது, சீர்திருத்தம் பற்றியெல்லாம்  கேள்வி கேட்பது அடிப்படைக் கடமைகள் என்பதை எந்தப் பள்ளியில், எந்தக் கல்லூரியில், சொல்லிக் கொடுக்கிறார்கள்? திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கூட்டங்களில் தானே போதிக்கிறார்கள்?

அறிவியல் பாடம் படிக்கும் குழந்தைகளிடம் அதற்கு நேர்முரணான கருத்துகளைத் திணிக்கும் பாடத் திட்டங் களை வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தால் அவர் களில் எப்படி "நியூட்டன் களும், ஸ்டீபென் ஹாக்கிங்ஸ் களும் உருவா வார்கள்?

'கேள்வி கேட்காதே', 'வாயை மூடு' இதுதானே குழந்தைகளை நோக்கி நாம் இடும் ஆணை? இந்தப் போக்கு மாறாவிட்டால் நம் குழந்தைகள் எப்படி நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளாக நாளை உருவாக முடியும்? 

கேள்வி மேல் கேள்வி கேட்டதால், இன்று பலருடைய கையில் செல்போன் என்ற கைப்பேசி, -அதுவும் 5ஜி வேகத்தில் "அந்த ஒரிஜினல் ஏன் அடைய முடியும் கண்டுபிடித்தவருக்கு 7, 8 அறிவா? இல்லையே நமக்குள்ள அதே 6 அறிவு தானே? அதை முறையாகப் பயன்படுத்தியவர் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்; நாம் குழவிக் கல்லுக்கு கல்யாணம் அதுவும் வருஷா வருஷம் செய்து வருகிறோம் - எப்படி வளருவோம்'? என்றவர் தானே பெரியார்!

அந்த கேள்வியின் நியாயத்தைப் பார்க்காமல், அவர் தாடியைப் பற்றி விமர்சிக்கும் வீணர்களாகத் தான் நம்மில் பலர் இருக்கின்றனர். குழந்தைகளை வளர்க்கும் போதே அறிவியல். சுவாசத்தை சுதந்திரமாக சுவாசிக்க அனுமதியுங்கள். பிறகு அது போட்டி போட்டு வளர்ந்து சாதனை சரித்திரம் படைக்கும்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாத முதல் 10 நாடுகள்!
February 16, 2022 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn