திண்டிவனம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 22, 2022

திண்டிவனம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அதனையொட்டி, திண்டிவனம் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவ, மாணவி யர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு துணைக்காவல் ஆய் வாளர்கள் ராதா, தமிழரசி ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள், சட்டம் மற்றும் சமூக பொறுப்புக்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், தலைமைக் காவலர்கள் பூங்கொடி, உமாதேவி, விமலா மற்றும் முதல்நிலைக் காவலர் ஆதிலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment