கனரா வங்கியின் 117ஆவது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசுப் பள்ளியில் படிக்கும் - சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவைச் சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் நடைபெற்ற தொழில் முனை வோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மய்யம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக் களுக்கு ரூ. 57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது. மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகைப் பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment