வெள்ளைக்காரன், பார்ப்பனர் அல்லாதார்
களுக்கும், முஸ்லீம்களுக்கும் பார்ப்பனர்களைப் போலவே சலுகை காட்ட ஆரம்பித்ததும் வெள்ளைக்காரனைத் துதிபாடி வரும் பார்ப்பனர்கள் - வெள்ளைக்காரனை ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு காந்தியாரைப் பிடித்து விளம்பரப்படுத்தினார்கள். அவர் மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர், மனிதனுடைய ஆத் மாவைவிட மேம்பட்ட ஆத்மாவை உடையவர்; மகாத்மா என்று விளம்பரப்படுத்தினார்கள். இவரும் பார்ப்பனர்க்கு நல்ல பிள்ளையாக இருந்து அவர்கள் சொன்னபடியெல்லாம் ஆடினார். தான் கடவுளுடன் நேரடியாகப் பேசிக் கொண்டு வருவதாகக் கூறினார். இவரால் நமது இழிவையோ, ஜாதிக் கொடுமையையோ, காட்டு மிராண்டித் தன்மையையோ ஒழிக்க எந்த ஒரு காதொடிந்த ஊசி அளவு கூடச் செய்யப்பட வில்லை. இவரிடம் சராசரி மனிதனுடைய அறிவைவிடச் சக்தியை விட எந்த உயர்வுத் தன்மையாவது காணப்பட்டதா? காணப்படு கின்றதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment