நாகை, நவ 12- இந்திய கடற் படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து நாகை அஞ்சல் நிலை யத்தை 7 மாவட்ட மீன வர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 37) என்பவருக்கு சொந்த மான விசைப்படகில் காரைக்கால், மயிலாடு துறை, நாகை மாவட்டங் களை சேர்ந்த 10 மீனவர் கள் கடந்த மாதம் 21ஆம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி னர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் என்ப வர் காயம் அடைந்தார்.
இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினர் இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இந்த நிலையில் மீன வர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கண் டித்து நாகை மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் நேற்று வரை 3 நாள்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரூ.9 கோடிக்கு மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் 11ஆம் தேதி முற்றுகை போராட் டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்திருந் தனர்.
அதன்படி நேற்று நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மீனவர் கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். அப் போது மழை பெய்தது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர்.
தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத் திய இந்திய கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப் பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவருக்கு நிவாரணம் வழங்க வேண் டும். அவரது குடும்பத் திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் சேதம் அடைந்த விசைப்படகுக்கு பதிலாக, புதிய விசைப்படகு வழங்க வேண்டும். அன்னிய செலா வணியை ஈட்டித்தரும் தமிழ்நாடு மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும், தமிழ்நாடு மீனவர்கள் மீது துப் பாக்கி சூடு நடத்திய இந் திய கடற்படையை கண் டித்தும் போராட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத் தில் நாகை, மயிலாடு துறை, காரைக்கால், புதுச் சேரி, புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியா குமரி உள்பட 7 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment