தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாய் ரூ.62 ஆயிரம் கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

தமிழ்நாடு ஜிஎஸ்டி வருவாய் ரூ.62 ஆயிரம் கோடி

சென்னை,நவ.20- தமிழ்நாட்டில் தற் போது ஜிஎஸ்டி வருவாய் ரூ.62 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழ் நாடு புதுச்சேரி ஜிஎஸ்டி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா சிறீனிவாஸ் தெரிவித்தார்.

சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஅய்) சார்பில்,சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர் பான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று முன் தினம் (18.11.2022) தொடங்கியது. சென்னை வர்த்தக சபையின் மேனாள் தலைவர் சிறீவத்ஸ் ராம் வரவேற் புரை ஆற்றினார். 

கருத்தரங்கை தொடங்கி வைத்து மண்டலிகா சிறீனிவாஸ் பேசியதாவது: 

ஜிஎஸ்டி வருவாய் கடந்த 2017-இல் ரூ.80 ஆயிரம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.1.5 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது. அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக இருந்தது. தமிழ் நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி 28 சதவீதமாக உள்ளது. 2021 - 2022ஆம் நிதி யாண்டு அக்டோபர் முடிவில் ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் வசூலானது. இது 2022 அக்டோபரில் ரூ.62 ஆயிரம் கோடி யாக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையை நிறுவ னங்களுக்கு திரும்ப வழங்க 60 நாட்கள் வரை ஆனது. நான் பொறுப் பேற்ற பிறகு இது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற் போது, 14 ரீஃபண்ட் மட்டுமே நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை தொழில் வர்த்தக சபை ஜிஎஸ்டி கமிட்டி தலைவர் வைத்தீஸ்வரன், துணைத் தலைவர் கோபகுமார், செயலாளர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட் டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.


No comments:

Post a Comment