அமிர்தசரஸ், நவ.14 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று (14.11.2022) அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தேசிய நிலநடுக்கவியல் மய்யம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் ஆக பதிவானது. 120 கி.மீ. தொலை வுக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. டில்லி மற்றும் அதன் பக்கத்து மாநிலங்களில் கடந்த வாரம் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் கடந்த 9 ஆம் தேதி நேபாளத்தை மய்யமாகக் கொண்டு 6.3 ரிக்டர் ஆக பதிவானது. 2 ஆவது நிலநடுக்கம் நேபாளத்தில் கடந்த 12 ஆம் தேதி 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment