குருதியைத் தூய்மையாக்கும் புதினா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

குருதியைத் தூய்மையாக்கும் புதினா

*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் ஒரு ஸ்பூன் காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

*ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

*புதினாவைக் காய வைத்துப் பொடியாக்கி அதில் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும்.

*புதினா, கிராம்பு, சோம்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

*புதினா இலைச்சாறுடன் பச்சைக் கற்பூரம் கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும்.

*புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம் குறையும்.

 *புதினா இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குருதியைத் தூய்மையாகும்.

No comments:

Post a Comment