35,281 காலியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மார்ச் மாதத்துக்குள் பணிநியமன ஆணை ரயில்வே செயல் இயக்குநர் தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

35,281 காலியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு மார்ச் மாதத்துக்குள் பணிநியமன ஆணை ரயில்வே செயல் இயக்குநர் தகவல்!

புதுடில்லி, நவ 21- ரயில்வே மற்றும் உற்பத்தி துறை களில் 35,281 காலியிடங் களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் தேர்வுகள் நடத் தியுள்ளது.

மொத்தமுள்ள 21 ஆர்.ஆர்.பி. தேர்வுகளில் 17-க்கான இறுதி முடி வுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இது குறித்து இந்திய ரயில்வேயின் செயல் இயக்குநர்(தகவல் மற்றும் விளம்பரம் பிரிவு) அமிதாப் சர்மா கூறுகையில், "இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 35,281 பணியிடங் களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை மார்ச் 2023க்குள், நிறைவடை யும். அனைத்து தேர்வு நிலைகளின் முடிவுகளை தனித்தனியாக பெற ரயில்வே தயாராகி வரு கிறது. அதனால் அதிக மான ரயில்வே ஆர்வலர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு தேர்வு முடிவு வெளியாகும் போது, ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுகிறார்.இதனால் தகுதியுடைய பலர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலை தேர்வு களின் முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவ தில்லை" என்றார்.

மீதமுள்ளவற்றுக் கான முடிவுகள் வெளியிடப்படும் கால அட்ட வணையை ரயில்வே வெளியிட்டு உள்ளது. இதில் 5ஆ-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் நவம் பர் 3-ஆவது வாரத்துக்குள் வெளியிடப்பட்டு, அடுத்த மாதம் 2-ஆவது வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தலும், மருத் துவ பரிசோதனையும் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆ-ம் வாரத்துக்குள் பணியில் சேரலாம். 4ஆ-ம் நிலைக் கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2-ஆம் வாரத்துக் குள் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரத்துக் குள் சான்றிதழ் சரிபார்த் தல், மருத்துவ பரிசோ தனை முடிக்கப்பட்டு, அதே மாதம் 4-வது வாரத் துக்குள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். 3-ஆம் நிலை பணியிடங் களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மார்ச் முதல் வாரத்துக் குள் முடிக்கப்படும். 2ஆம் நிலை பணியிடங் களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அதே மாதம் 4-ஆம் வாரத் துக்குள் முடிவடையும் என ரயில்வே கூறியுள்ளது.

No comments:

Post a Comment