தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ.28 தமிழ்நாட்டில்  25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய் யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆண்கள், 14 பெண்கள் உள்பட மொத்தம் 25 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் உள்பட மொத்தம் 11 மாவட் டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி யுள்ளது. தேனி, திருப்பத்தூர், விருதுநகர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 160 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது 268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


No comments:

Post a Comment