தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 20-க்கும் கீழ் வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

தமிழ்நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பு 20-க்கும் கீழ் வந்தது

சென்னை, நவ 30 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.  கடந்த பல வாரங்களாகவே கரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 20 க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில்  புதிதாக 7 ஆண்கள், 12 பெண்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 பேர் உள்பட மொத்தம் 10 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.  

இந்தியாவில்... 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.


No comments:

Post a Comment