100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை, நவ.30 மின்இணைப்பு தாரர்கள் எத்தனை இணைப்பு வைத் திருந்தாலும் அவர்களுக்கு வழங்கப் படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.   

சென்னை, டாக்டர் ராதாகிருஷ் ணன் சாலையில் ராயப்பேட்டை பாலம் அருகில் உள்ள மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மய்யத்தில் மின்சார இணைப்பு பெற்ற நுகர்வோர் களின் ஆதார் எண்ணை மின்சார இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி நடந்தது. அதனை, மின்சார வாரி யத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே மின்சார வாரியத் தால் தொடங்கப்பட்டன. இதுவரை 15 லட்சம் மின்இணைப்பு தாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இதுகுறித்து விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். வாரியத்தின் கீழ் செயல்படும் 2 ஆயிரத்து 811 பிரிவு அலுவலகங்களில் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில், விழா நாட்கள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களும் பிரிவு அலுவலகங்களில் இதற்கான பணிகள் நடக்கிறது. பொது மக்கள் இதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 வாரியம் மூலம் அரசு மானியம் வழங்கி 100 யூனிட் உள்ளாக பயன்படுத் தப்படும் குடிசைகள், ஏற்கெனவே வழங் கப்படும் 100 யூனிட் இலவச மின்சார மாக இருந்தாலும் சரி, கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களாகான இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி, விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் சரி, ஏற்கெனவே அரசின் அனைத்து இலவச மின் திட்டங்கள், மானியங்கள் வழங்கப்படும் திட்டங் களுக்கான நடைமுறைகள் பின்பற்றப் படும். அதேநிலையில் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. ஆனால் உண்மைக்கு மாறாக ஆதார் எண்ணை மின்இணைப்புடன் இணைத்தால் இந்த திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தவறான பிர சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. எவ்வளவு பேர் சொந்த வீட்டில் குடி யிருக்கிறார்கள்?, எவ்வளவு பேர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்? என்றும், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது?, எந்தவித தரவுகளும் மின்வாரியத்தில் இல்லை. சுமார் 1 கோடியே 15 லட்சம் மின்இணைப்புதாரர்களின் தரவுகள் மட்டுமே இருந்தன. மின்சார வாரி யத்தை மேம்படுத்த வேண்டும். அதே போல் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வாரியத்தை நவீனப் படுத்துவதற்காக மின்இணைப்பையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

ஒரே ஆதார் எண்ணில் 10 இணைப் புகள் இருந்தால் ஒரு இணைப்புக்கு தான் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவார்கள் என்று பொதுமக்களிடம் இருக்கும் தவறான கருத்து தேவை யற்றது. மின்இணைப்பு தாரர்கள் 4 அல்லது 5 இணைப்பு வைத்திருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ள தால் பணம் கட்டுவதில் எந்த பாதிப்பும் இல்லை. ஒரே ஆதார் எண்ணில் 10 இணைப்புகள் இருந்தாலும் இணைத் துக் கொள்ளலாம். காலஅவகாசம் இருப்பதால் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை பொறுமையாக செய்யலாம். அவசரப்பட வேண்டிய தில்லை. பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.16 ஆயிரத்து 511 கோடி வட்டி மட்டும் கட்டப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் இழப்புகளை சரிசெய்யவும், வாரியத்தை மேம்படுத்த வும் இதுபோன்ற பணிகள் முன்னெடுக் கப்பட்டு உள்ளது. இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


No comments:

Post a Comment