புதுடில்லி, நவ. 19-- இந்தியா வந்துள்ள வெளிநாட்டி னரில் அமெரிக்கர்களே அதிகம் ஆவர். இந்தியா வில் கரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021ஆ-ம் ஆண்டு களில் இந்தியாவில் பன் னாட்டு விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்தன.
அத்துடன் வெளிநாடு களில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்தன. இந் நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 15.24 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ள னர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் 74.39 சத வீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந் தியா வந்துள்ள வெளி நாட்டினரில் அமெரிக்கர் களே அதிகம் ஆவர். அந்த வகையில் 4.29 லட்சம் அமெரிக்கர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்து உள்ளனர்.
அடுத்ததாக வங்காள தேசத்தவர்கள் 2.40 லட் சம் பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 1.64 லட்சம் பேர், கனடா மற்றும் நேபாள நாட்டினர் முறையே 80,437 பேர் மற்றும் 52,544 பேரும் இந்தியா வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான், ஆஸ் திரேலியா, ஜெர்மனி, போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாட்டினரும் அதிக அள வில் கடந்த ஆண்டு இந் தியாவுக்கு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment