அந்தோ கொடுமை!! தேவதாசி முறை நீடிக்கிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

அந்தோ கொடுமை!! தேவதாசி முறை நீடிக்கிறதா?

 மனித உரிமை ஆணையம் தாக்கீது

புதுடில்லி,அக்.17- ‘கோயிலில் உள்ள கடவுளுக்கு பெண் குழந் தைகளை திருமணம் செய்து வைத்து, அவர்கள் தேவதாசி களாக மாற்றப்படுகின்றனர். எஞ்சியுள்ள காலம் முழுவதும் மதகுருக்களுக்கு பணிவிடை செய்தல், அன்றாட கோயில் சடங்குகளை செய்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுத் தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின் றனர். இதை தடுக்க, பல சட் டங்கள் இருந்தாலும், பல பகுதிகளில் தேவதாசி முறை இன்னும் தொடர்கிறது. இவ் வாறு பாதிக்கப்படும் பெண் களில் பலரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஏழை பெண்கள்’என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் ரீதியாக துன்புறுத் தும் விதமாக பெண்களை தேவதாசிகளாக மாற்றுவது அவர்களது வாழும் உரிமை, கவுரவம், சம உரிமை ஆகியவற் றுக்கு எதிரான கடுமையான விதிமீறல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனால், நாளிதழ் செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரகுநாத் ராவ் தலைமையிலான குழுஅளித்த அறிக்கையில், ‘கருநாடகா, ஆந்திரா அரசு களால் 1982 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளிலேயே தேவதாசி முறை சட்ட விரோதமானது' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘தென்னிந்திய பகுதிகளில் பல்வேறு கோயில்களில் தேவதாசி முறை தொடர்வதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அந்த மகளிருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறி வுறுத்தி ஒன்றிய மகளிர், குழந் தைகள் மேம்பாட்டு அமைச்ச கம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 6 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment