சென்னை, அக். 9- தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலமாக 133 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள னர். பல்வேறு குற்றச்சம் பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளை ஆபரேஷன் ‘மின் னல் ரவுடி வேட்டை‘ மூலமாக கைது செய்து வருகின்றனர். இந்நிலை யில் நேற்று ஒரேநாளில் 133 பிரபல ரவுடிகளை காவல்துறையினர் அதி ரடியாக கைது செய்துள்ள னர். இதுகுறித்து, காவல் துறை இயக்குநர் சைலேந் திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு முழுதுவம் நடத்தப்பட்ட ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை‘ மூலமாக நேற்று மட்டும் 133 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை, கொள்ளை வழக்குகளில் பிடி ஆணை நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட் டனர். பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தும் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகள் 13 பேர் மற்றும் ஏ-பிளஸ் ரவுடிக ளும் சிக்கியுள்ளனர்.
மேலும், இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குக ளும் நிலுவையில் உள் ளன. மேலும், பிடிபட்ட மற்ற 105 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. தமிழ்நாடு முழுவ தும் ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலமாக ரவுடிகளை பிடிக்க காவல் துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற னர் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment