மராட்டிய சட்டமன்ற இடைத்தேர்தல்: தோல்வி பயத்தால் பிஜேபி விலகல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

மராட்டிய சட்டமன்ற இடைத்தேர்தல்: தோல்வி பயத்தால் பிஜேபி விலகல்!

மும்பை, அக்.19 தோல்வி பயத்தால் பா.ஜனதா இடைத்தேர்தல் போட் டியில் இருந்து விலகி உள்ளதாக சிவசேனா கூறியுள்ளது.

மராட்டிய மாநில அந்தேரி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப் பினரான  ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதே போல பா.ஜனதா சார்பில் முர்ஜி பட்டேல் வேட்பாளராக நிறுத்தப் பட்டார்.

இந்தநிலையில் ருதுஜா லட்கே போட்டியின்றி தேர்வாகும் வகையில் பா.ஜனதா தனது வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என ராஜ் தாக்கரே, சரத்பவார் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக பா.ஜனதா அவர்களது வேட்பாளரை திரும்ப பெற்றது. பா.ஜனதா வேட் பாளர் முர்ஜி பட்டேல் அவரது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். இந்தநிலையில் தோல்வி பயம் காரணமாகவே பா.ஜனதா வேட் பாளரை திரும்ப பெற்றதாக சிவ சேனா தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment